News October 23, 2024

காவல் நிலையத்தில் பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சி

image

பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன். இவர், மதன் என்பவரை தாக்கியதால் விசாரணைக்காக பெரும்பாக்கம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தில் அறுத்துக் கொண்டார். பதறிய போலீசார் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

செங்கல்பட்டு: திருநங்கையிடம் வழிப்பறி; 3 பேர் கைது

image

தாம்பரம் கடப்பேரியை சேர்ந்தவர் ஆர்த்தி (24). திருநங்கை. கடை கடையாக சென்று வசுல் செய்து வாழ்ந்து வந்தார். நேற்று கடப்பேரி ஜிஎஸ்டி சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது இவரை வழிமறித்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.2500/- யை பறித்து சென்றனர். புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் பிரதீப் (24), மதன் (20), தினேஷ் (19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

News November 9, 2025

செங்கல்பட்டு: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

image

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில்<> இங்கே கிளிக்<<>> செய்து, நுழைந்து ஆதார் எண்ணை தந்து Login செய்யவும். 2.அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ ஆப்சனை தேர்ந்தெடுக்கவும். 3.அதில், முகவரி இடத்தில் உங்களது புதிய முகவரியை பதிவிடவும். 4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும். 5.பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம்.

News November 9, 2025

செங்கல்பட்டு: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!