News October 13, 2025

காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

image

இன்று (அக்.13) இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்டத்தில் முக்கிய வழக்குகளான கொலை,அடிதடி மற்றும் திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகளை குறித்தும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் ஆலோசிக்கப்பட்டது.

Similar News

News November 8, 2025

ராணிப்பேட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். மேலும் இது தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

ராணிப்பேட்டை: பட்டாவில் பெயர் மாற்றமா? இனி ஈஸி!

image

ராணிப்பேட்டை மக்களே! உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு<> Citizen Portal<<>> வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம். உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 8, 2025

ராணிப்பேட்டை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்!

image

ராணிப்பேட்டை ரெட்டிவலம் அருகில் நேற்று (நவ.7) அரக்கோணம் நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்னர் அரசு பஸ் நெமிலி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!