News January 13, 2025

காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

image

ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் அரச்சலூர் அருகே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உடலை கைப்பற்றிய அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Similar News

News August 14, 2025

ஈரோடு: நாளை முதல் சேவை தொடக்கம்!

image

சென்னிமலையில் முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. மலை கோவிலில் தார் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் மலைக்கு பஸ் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. நாளை முதல் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் இந்து அறநிலையத்துறை சார்பில் சிறப்பு கோவில் பஸ் இயக்கபடுகிறது. பக்தர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள அறநிலையத்துறை சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது.

News August 14, 2025

ஈரோடு அருகே அரசு பள்ளியில் எம்.பி ஆய்வு

image

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, சிவகிரி – அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நாடாளுமன்ற தொகுதி நிதியின் மூலம் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய நிலத்தடி நீர் தேக்கத் தொட்டி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் ஈரோடு எம்பி., கே.இ.பிரகாஷ் பங்கேற்று பணிகளை துவங்கி வைத்தார். பின்னர் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு பார்த்து ஆய்வு செய்தார்.

News August 14, 2025

ஈரோடு: உங்கள் கிராம வரவு செலவு கணக்கை பாருங்க!

image

ஈரோடு மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து உங்கள் ஊராட்சியின் நிர்வாக வெளிப்படை தன்மையை காணலாம்! அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!