News May 7, 2024
காவல் உதவி ஆய்வாளரை பாராட்டிய மாவட்ட எஸ்.பி.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் மாணவி ஒருவர் நுழைவுச்சீட்டை மறந்து விட்டு தேர்வு மையத்திற்கு வந்த நிலையில் உடனடியாக சம்பந்தப்பட்ட மாணவிக்கு அங்கு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் கணேசன் உடனடியாக நுழைவு சீட்டை பதிவிறக்கி மாணவிக்கு தேர்வெழுத உதவி செய்தார். இச்செயலைப் பாராட்டி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் கணேசனை நேரில் அழைத்து பாராட்டினார்.
Similar News
News February 3, 2026
திருப்பத்தூர் அருகே கோர விபத்து; தலைநசுங்கி பலி

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அசாருதின் இவர் லாரி கிளீனர் யாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (பிப்.2)அதிகாலை கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து வேலூர் நோக்கி பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது நாட்டறம்பள்ளி அருகே பச்சூர் டோல்கேட் பகுதியில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் கிளீனர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார்.
News February 3, 2026
கற்பூரத்தை விழுங்கிய குழந்தை!

கள்ளக்குறிச்சி: பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது குழந்தை தசித்ராஜ் (2). இன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது பூஜை அறையில் இருந்து கற்பூரத்தை எடுத்து விழுங்கிவிட்டது. இதையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News February 3, 2026
கற்பூரத்தை விழுங்கிய குழந்தை!

கள்ளக்குறிச்சி: பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது குழந்தை தசித்ராஜ் (2). இன்று வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது பூஜை அறையில் இருந்து கற்பூரத்தை எடுத்து விழுங்கிவிட்டது. இதையறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


