News October 18, 2024
காவல் ஆணையர் மன்னிப்பு கேட்டதாக பரவிய போலியான தகவல்

சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அப்போது, “ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்” என தெரிவித்தார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து, ஆணையர் அருணுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், காவல் ஆணையர் அருண், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானது போலியான தகவல் என தற்போது தெரியவந்துள்ளது.
Similar News
News September 13, 2025
சென்னை: IOB வங்கியில் வேலை வேண்டுமா?

▶️இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️ இதற்கு Any Degree அல்லது B.E./B.Tech, MBA, M.Sc, MCA, M.E./M.Tech முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். ▶️ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும் ▶️ஆன்லைன் தேர்வு, நேர்காண மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். ▶️நவ.3ஆம் தேதிக்குள் www.iob.in/Careers என்ற இணையதளத்தில் விண்ணபிக்க வேண்டும் ▶️SHARE பண்ணுங்க
News September 13, 2025
கிண்டி தேசிய பூங்காவில் பரவும் பன்றி காய்ச்சல்

கிண்டி தேசிய பூங்கா இந்தியாவில் 8-வது சிறிய பூங்காவாகும். இப்பூங்காவிற்குள் தெருவில் திரியும் 12 பன்றிகள் இறந்து கிடந்தன. இதனையடுத்து கால்நடை பராமரிப்பு துறையினர், சில மாதிரிகளை போபாலில் உள்ள பாதுகாப்பு விலங்கு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில், ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் பரவி இருப்பதாக தெரியவந்தது. பூங்கா வளாகத்தில் பன்றிகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
News September 13, 2025
சென்னையில் இன்று மின்தடை

சென்னையில் இன்று (செப்.13) பல்வேறு பகுதியில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், அடையாறு, எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (ஷேர் பண்ணுங்க)