News March 4, 2025

காவல்துறை குறை தீர்ப்பு கூட்டம்

image

கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது.அந்த வகையில் நாளை (5) நடைபெற உள்ள குறை தீர் கூட்டத்தில் காவல் நிலையங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் புகார்கள் திடர்பாக மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 4, 2025

இரவு ரோந்து அதிகாரிகள் விவரம் வெளியீடு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு-நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News March 4, 2025

தூத்துக்குடி மக்களை சுண்டி இழுக்கும் தம்மடை

image

தூத்துக்குடி, காயல்பட்டினத்தில் தயாரிக்கப்படும் தம்மடை அலாதி சுவையானது. பணியாரம் போன்று காட்சியளிக்கும் தம்மடை ரவை, சீனி, தேங்காய் பால், முந்திரிப்பருப்பு பாதாம், பிஸ்தா ஆன கலவையை அச்சில் வைத்து குறிப்பிட்ட வெப்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இதன் மணம் ஆளை சுண்டி இழுக்க கூடியது. மிதமான சூட்டில், இதை சாப்பிட்டால் கணக்கே இல்லாமல் இறங்கும். ‘இன்னும் சாப்பிடலைன்னை உடன் காயலுக்கு வண்டிய விடுங்க’ SHARE IT

News March 4, 2025

விவசாயிகள் நில உடமை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

image

தூத்துக்குடி மாவட்ட வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமை விவரங்கள் கிராமங்கள்தோறும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான காலக்கெடு இம்மாதம் 15ஆம் தேதி என இருந்த நிலையில், தற்போது மார்ச் 31ஆம் தேதி வரை விவசாயிகள் தங்கள் நில உடமைகளை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். SHARE IT.

error: Content is protected !!