News September 5, 2025
காவல்துறையில் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்டம்பர் (04/09/25) நாமக்கல்-( ராஜமோகன்: 9442256423 ) ,வேலூர் -( ரவி :9498168482 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி :9498169110), திம்மநாயக்கன்பட்டி -( ரவி: 9498168665 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Similar News
News September 5, 2025
நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில் வரும் சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் வெப்பம் 91.4 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News September 5, 2025
நாமக்கல்: பயிற்சியுடன் மாதம் ரூ.12,000!

நாமக்கல் மக்களே, எல்ஐசி வீட்டு நிதி நிறுவனத்தில் (LIC Housing Finance) தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.12,000 உதவித்தொகையுடன் 12 மாதங்களுக்கு அந்தந்த மாநில அலுவலகங்களிலேயே பயிற்சி அளிக்கப்படகிறது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 5, 2025
இராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் அசத்தல்!

இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி மாணவன் பி.கோபிபிரசாந்த், புது டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம், அந்தமானில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க அவர் தகுதி பெற்றுள்ளார். மேலும், அதே கல்லூரியை சேர்ந்த மாணவன் எஸ்.ஹரி, தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் 2 மற்றும் 3ஆம் இடங்களை பிடித்து கோப்பைகளை வென்றுள்ளார்.