News June 6, 2024

காவலர் கந்துவட்டி கேட்பதாக எஸ்பியிடம் புகார்

image

நாங்குநேரி காவல் நிலைய பெண் காவலர் ஒருவர் கந்து வெட்டி கேட்டு மிரட்டுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் இன்று (ஜூன் 6) பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்க சிலம்பரசன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். காவலரே கந்துவட்டி கேட்டு மிரட்டிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News November 12, 2025

நெல்லை: மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

image

முக்கூடல் காந்தி தெருவை சேர்ந்த நிராஜ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு மாடியில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இந்நிலையில் அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். பாப்பாக்குடி போலீசார் நிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News November 12, 2025

நெல்லை ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து

image

நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிக்காக திருச்செந்தூரில் இருந்து காலை 10.10 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் பயணிகள் ரயிலானது வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவத்துள்ளது. மேலும், செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் ரயில் சேரன்மகாதேவி வரை மட்டுமே மேற்கண்ட 3 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 11, 2025

நெல்லை: கிறிஸ்தவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில் ஜெருசலின் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவர்களுக்கு இ சி எஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மாவட்ட சிறுபான்மை நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். *SHARE

error: Content is protected !!