News October 18, 2024

கால்நடை வளர்ப்போருக்கு மாவட்ட நிர்வாகம் தகவல்

image

மழைக்காலத்தில் கால்நடைகளை எவ்வாறு பராமரிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் வழிமுறைகளை அளித்துள்ளது. அதன்படி, கால்நடைகளுக்கு நோய்தடுப்புசீகளை சரியாக செலுத்த வேண்டும். மழையின் போது கொட்டகையில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ளுதல், சுத்தமான குடிநீர், அடர்தீவனம் உள்ளிட்டவை சரியாக வழங்கப்பட வேண்டும் என்றும், மழைக்காலத்தில் இறக்கும் கால்நடைகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Similar News

News July 9, 2025

திருவாரூர்: ITI போதும் 60,000 வரை சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது. இதற்கு BE / ITI / டிப்ளமோ முடித்தவர்கள் வரும் ஜூலை.12-க்குள் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு திருவாரூரில் வரும் ஜூலை 31 அன்று நடைபெறும். இந்த தகவலை உங்க நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News July 9, 2025

திருவாரூர்: முதலமைச்சரின் 2 நாள் பயணம்

image

2 நாள் பயணமாக இன்று (ஜூலை 9) திருவாரூருக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் கோட்டத்திலிருந்து பனகல் சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக ரோடு ஷோ செல்கிறார். அதனை அடுத்து, திருவாரூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையை திறந்துவைக்கிறார். திருவாரூரில் இரவு தங்கும் முதலமைச்சர், நாளை இன்று (ஜூலை 10) காலை அரசு விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்பவுள்ளார்.

News July 9, 2025

திருவாரூர்: ஆற்றில் மூழ்கிய கூலி தொழிலாளியின் உடல் மீட்பு

image

கூத்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முகமது ஹனிபா (56). இவர், நேற்று முன்தினம் பாய்க்காரத் தெரு பாலம் அருகில் உள்ள வெண்ணாற்றில் குளிப்பதற்காக இறங்கியபோது, ஆற்றில் அதிக அளவில் சென்ற தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி மாயமானார். இதனை அடுத்து கூத்தாநல்லூர் தீயணைப்பு படையினர் தகவல் அறிந்து, நேற்று முன்தினம் முதல் தேடும் பணியில் ஈடுபட்டு, நேற்று மாலை முகமது ஹனிபாவின் உடலை மீட்டனர்.

error: Content is protected !!