News November 16, 2024
கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் – மாநகராட்சி எச்சரிக்கை

கோவை மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிவதாக பொதுமக்களிடம் இருந்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கால்நடைகள் முதல் இருமுறை பிடிபட்டால் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் பிடிபட்டால் கோசாலையில் ஒப்படைக்கப்படும். மேலும் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
Similar News
News March 2, 2026
கோவை – அபுதாபி விமான சேவை ரத்து

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாள்கள் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
கோவை – அபுதாபி விமான சேவை ரத்து

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் துபை உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாள்கள் இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News March 2, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (01.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


