News May 9, 2024
காலை உணவுத் திட்டத்தால் 15,962 மாணவர்கள் பயன்

அரசின் காலை உணவுத் திட்டத்தால் தமிழ்நாட்டில் நகர்புற, ஊரகப் பகுதிகளில் 31,000 அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 18.5 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் பிற மாநிலங்கள் மட்டுமின்றி அயல்நாடு கனடாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இத்திட்டத்தின் வாயிலாக 15,962 மாணவர்கள் பயன் பெற்றுள்ளதாக மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
Similar News
News August 21, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட. 21) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.64 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.10 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.56 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.66 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 623 கன அடி, பெருஞ்சாணிக்கு 217 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.
News August 21, 2025
குமரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்!

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (22.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் குமரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற SHARE பண்ணுங்க.
News August 20, 2025
துபாயில் கைது செய்யப்பட்ட குமரி மீனவரை மீட்க குடும்பத்தினர் மனு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோடிமுனையை சேர்ந்த அருள்ரீகன்(43) துபாயில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்த நிலையில், ரஷ்ய நாட்டு நபர் ஒரு படகை கடத்திய வழக்கில், தொடர்பில்லாமலே அருள்ரீகன் உடந்தையாக செயல்பட்டார் என பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கணவரை மீட்டுத் தர வேண்டும் என அவரது குடும்பத்தினர் இன்று(ஆக.20) மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.