News January 13, 2026
காலைக் கடன் கழிப்பதில் சிரமமா? ஒரே நாளில் தீர்வு

மலச்சிக்கல் பிரச்னையால் அவதிப்படுறீங்களா? கவலையவிடுங்க. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த திரிபலா தூள் இதற்கு தீர்வாக அமையும். 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் இந்த பொடியை சேர்த்து தேன் கலந்து குடியுங்கள். இதனை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு (அ) அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பிரச்னை தீரும். பலருக்கும் பயனளிக்கும் தகவலை SHARE பண்ணுங்க.
Similar News
News January 23, 2026
சேலை மடிப்பில் இதயங்களை நொறுக்கும் கயாது ❤️❤️

பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான கயாது லோஹர் அடுத்ததாக ‘இதயம் முரளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இளைஞர் மத்தியில் கனவு கன்னியாக வலம் வரும் அவரின் போட்டோஸுக்கு எப்போதுமே SM-ல் ஹார்ட்டின் பறக்கும். அப்படி சேலையில், மென்மையான சிரிப்புடன் அவர் பகிர்ந்துள்ள ரீசண்ட் கிளிக்ஸ் மனதை கொள்ளை கொள்கிறது. உங்கள் நெஞ்சத்தை பறிகொடுக்க மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்யுங்கள்.
News January 23, 2026
தமிழ்நாட்டில் 5 புதிய மாவட்டங்கள்.. புதிய தகவல்

தமிழ்நாட்டில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலம், தி.மலையில் இருந்து செய்யாறு, கோவையில் இருந்து பொள்ளாச்சி, சேலத்தில் இருந்து ஆத்தூர், தஞ்சையில் இருந்து கும்பகோணம் ஆகிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு குடியரசு தினத்தன்று (ஜன.26) வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News January 23, 2026
சட்டப்பேரவையில் உதயகுமார் Vs ரகுபதி வார்த்தை போர்

சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்து EX அமைச்சர் உதயகுமார் மற்றும் அமைச்சர் ரகுபதி இடையே காரசார விவாதம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாகவும், நிரந்தர டிஜிபி இல்லாததால் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனவும் உதயகுமார் குற்றம்சாட்டினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, இந்தியாவிலேயே குற்ற சம்பவம் குறைவாக நடப்பது தமிழகத்தில் தான் என விளக்கமளித்துள்ளார்.


