News March 1, 2025
காலாவதியான PLI/RPLI பாலிசிகளைப் புதுப்பித்துலுக்கான சிறப்பு முகாம்!

காலாவதியான PLI/RPLI பாலிசிகளைப் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் வரும் மார்ச் 01 முதல் மே 31 வரை அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது.பாலிசிகளை புதுப்பிக்கும் போது செலுத்த வேண்டிய தாமதக் கட்டணத்தில் 25% முதல் 30% தள்ளுபடியை அஞ்சல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வேண்டுகோள்!
Similar News
News March 1, 2025
சேலத்தில் இன்றைய நிகழ்வுகள்

சேலத்தில் இன்று (மார்ச்.1) முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8:30 தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொன்னம்மாபேட்டை பகுதியில் அன்னதானம் நடைபெறவுள்ளது. 2) காலை 9:30 மணி 2025-26 கல்வி ஆண்டிற்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மணக்காடு அரசு துவக்கப்பள்ளி துவக்கி வைக்கும் நிகழ்வு. 3) காலை 9 மணி காது, மூக்கு, தொண்டை இலவச பரிசோதனை முகாம் விவேகானந்தா மருத்துவமனையில் நடைபெறுகிறது.
News March 1, 2025
பறவைகள் கணக்கெடுப்பில் மாணவர்கள் பங்கேற்கலாம்

சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட சேர்வராயன் தெற்கு வனச்சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் வருகின்ற மார்ச் 08, 09 ஆகிய தினங்களிலும் சதுப்பு நில பறவைகள் கணக்கெடுப்பும் மற்றும் மார்ச் 15, 16 ஆகிய தினங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.
News March 1, 2025
சேலம் மாவட்டத்தில் மழை

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை முதல் சில பகுதியில் லேசான சாரல் மற்றும் மிதமான மழை பெய்யது. கடந்த இரண்டு நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், காலையில் பெய்த சாரல் மழையால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.