News January 16, 2026
காற்று மாசால் தலைநகரில் 9,000 பேர் பலியா?

தலைநகரில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், 2024-ல் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,211-ஆக உயர்ந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. இது 2023-இல் பதிவான 8,801 உயிரிழப்புகளை விட அதிகம். ஆஸ்துமா, நிமோனியா போன்ற சுவாசக் கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2024-ஐ விட 2025-ல் உயிரிழப்பு மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது.
Similar News
News January 24, 2026
அரசியலுடன் மதத்தை இணைப்பது ஆபத்து: மாயாவதி

குறுகிய நலனுக்காக சிலர் அரசியலையும், மதத்தையும் இணைப்பதாக Ex CM மாயாவதி வேதனை தெரிவித்துள்ளார். அண்மை காலமாக அரசியலில் தீவிரம் காட்டாமல் இருந்த மாயாவதி உத்தரபிரதேச தினத்தையொட்டி தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், UP-ல் நடக்கும், மத விழாக்கள், புனித நீராடல்களில் அண்மை காலமாக அரசியல் தலையீடு அதிகரித்துள்ளதாக ஆளும் பாஜக அரசை சாடியுள்ளார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
News January 24, 2026
சற்றுமுன்: போலீஸ் வாகனம் மீதே நாட்டு வெடிகுண்டு வீச்சு

பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் வெள்ளை காளியை, சென்னை புழல் சிறைக்கு அழைத்து சென்றபோது, பெரம்பலூர் திருமாந்துறை அருகே 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், ரவுடி, போலீசார் பலத்த காயமடைந்துள்ளனர்.
News January 24, 2026
பள்ளிக் கட்டணங்களை கட்டுப்படுத்த புதிய கமிட்டி

TN-ல் பள்ளிக் கட்டணங்களை முறைப்படுத்தும் <<18943567>>திருத்த மசோதா<<>> சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, Retd நீதிபதி தலைமையில் 7 பேர் கமிட்டி தனியார் பள்ளிகளின் கட்டணங்களை ஆராய்ந்து உச்சவரம்பை நிர்ணயிக்கும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணங்கள் சீராய்வு செய்யப்படும். பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பின் கருத்தும் கேட்கப்படும் என்பது கூடுதல் தகவல். இது அமலுக்கு வரும்தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.


