News January 12, 2025
கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராமர்( 55) நேற்று மாலை புதுச்சேரியில் இருந்து தனது இருசக்கர வாகனம் மூலம் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்த போது உளுந்தூர்பேட்டை எம்.எஸ்.தக்கா பகுதியில் வந்தபோது எதிரே கோவையிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ராமரின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News September 12, 2025
இரவு நேர ரோந்து பணி- மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (செப்.,12) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 12, 2025
கள்ளகுறிச்சி: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் <
News September 12, 2025
கள்ளக்குறிச்சி: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

கள்ளக்குறிச்சி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.
▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
▶️மீறினால் தொடர்புடைய அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!