News April 15, 2025

கார் மோதி சாலையோரம் நின்ற சிறுவன்,சிறுமி பலி

image

சாயல்குடியை சேர்ந்தவர் சொர்ணராஜன். இவரது மகள் சண்முகப்பிரியா 13. அவரது உறவினர் மகன் ஹரி சூர்யா பிரகாஷ்.14 இருவரும் பத்ரகாளியம்மன் கோயில் விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்ப கிழக்கு கடற்கரை சாலையோரம் ஒரமாக நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒர் கார் இருவர் மீதும் மோதியது சம்பவ இடத்தில் சண்முகப்பிரியா உயிரிழந்தார்.சிறுவன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News April 17, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய உதவி எண்கள்

image

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077, ஆட்சியர் அலுவலகம் – 04567-230056,57,58, தீ தடுப்பு, பாதுகாப்பு-101, விபத்து அவசர வாகன உதவி – 102
மருத்துவ உதவி – 104, குழந்தைகள் பாதுகாப்பு – 1098
பேரிடர் கால உதவி – 1077, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993 ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம்.*ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

இராமநாதபுரத்தில் ரூ.5.5 கோடியில் புதிய திட்டம்

image

பொதுப்பணித்துறை(நீர்வளம்) அதிகாரிகள் இதுகுறித்து கூறுகையில், பார்த்திபனுார் நீர்த்தேக்கம் துவங்கி ராமநாதபுரம் அருகே ஆற்றங்கரை வரை 78 கி.மீ., உள்ள ஆற்றின் இரு கரைகள், கால்வாய்க்குள் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்ட மதிப்பீடு தயார் செய்து (ரூ.5.5கோடி) பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அரசாணை வெளியான பிறகு இதற்கான வேலைகள் தொடங்கப்படும் என்றார். *ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!