News January 29, 2025

கார் மோதிய விபத்தில் முதியவர் பலி

image

தாடிக்கொம்பு கிரியம்பட்டியை சேர்ந்தவர் பிச்சை (67). இவர், விட்டல் நாயக்கன்பட்டி அருகே நடந்து சென்று, திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற கார், பிச்சை மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Similar News

News August 20, 2025

ஒட்டன்சத்திரம் போக்சோ வழக்கு சிறை மற்றும் அபராதம்!

image

ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்த தின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி(58) என்பவரை ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் செல்லப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் இன்று விதித்தனர்.

News August 20, 2025

தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை

image

தனியார்,அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் 2025-ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை ஆக. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சோ்க்கை பெற விரும்பும் மாணவா்கள், குஜிலியம்பாறை தொழில்பயிற்சி நிலையத்துக்கு (கரிக்காலிப் பிரிவு) நேரில் சென்று சோ்க்கை மேற்கொள்ளலாம். விவரங்களுக்கு குஜிலியம்பாறை அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வரை நேரிலும், 99943 09861, 96008 27733 கைப்பேசி எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.

News August 19, 2025

திண்டுக்கல்: மாதம் ரூ.15,000 பயிற்சியுடன் வங்கி வேலை!

image

திண்டுக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. நாளை ஆக.20 கடைசி தேதி ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!