News July 7, 2025
கார் மோதியதில் கணவன் மனைவி மகள் பலி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நீர்முளை பிரதான சாலையில் கார் மோதி இரு சக்கர வாகனத்தில் வந்த கணவன் மனைவி மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்திலிருந்து திருத்துறைப்பூண்டிக்கு இரு சக்கர வாகனத்தில் மருதம்பட்டினத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் தனது மனைவி பெரியநாயகி 7 வயது மகள் ஆகிய மூன்று பேர் உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
நாகை: சொந்த ஊரில் அரசு வேலை (1/2)

தமிழகத்தில் காலியாக உள்ள ‘2299’ தலையாரி எனும் கிராம உதவியாளர் (VA) பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள 68 காலிப்பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. குறைந்தது 10-ஆம் வகுப்பு முடித்த, எழுதப் படிக்க தெரிந்த நபர்கள் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க! (<<16974210>>பாகம்-2<<>>)
News July 7, 2025
நாகை: சொந்த ஊரில் அரசு வேலை (2/2)

➡️ விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
➡️ வயது: 21-37 க்குள் இருக்க வேண்டும்
➡️ சைக்கிள் / டூவீலர் ஓட்ட தெரிந்திருந்தால் நல்லது
➡️ எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
➡️ கிராம உதவியாளராக 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு விஏஓ-வாக பதவி உயர்வு வழங்கப்படும்
➡️ மேலும் தகவலுக்கு உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க! (<<16974190>>பாகம் 1)<<>>
News July 7, 2025
கோடியக்கரை சரணாலயத்தின் சிறப்பம்சங்கள்!

நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பசுமை மாறாக்காட்டில் புள்ளிமான், வெளிமான், நரி, பன்றி, மயில் உள்ளிட்ட விலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிகின்றன. இந்த காட்டில் 154 மூலிகை உள்ளிட்ட 271 வகையான தாவர வகைகள் உள்ளன. ராமாயணத்தில் இங்கு நின்று ராமர் இலங்கையை பார்த்த இடம், ராமர் பாத நினைவிடமாக தொல்பொருள் ஆராய்ச்சித்துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஷேர் பண்ணுங்க!