News February 10, 2025
கார் டயர் வெடித்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

திண்டுக்கல்: நத்தம் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில், புதூர் அருகே மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று டயர் வெடித்ததில், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 6, 2026
பழனியில் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்ததால் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரிய பள்ளிவாசல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 3 சிறுவர்களை தெரு நாய்கள் கடித்ததால் சிறுவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை அனுமதி நகராட்சி நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்..
News March 6, 2026
நத்தம் அருகே விபத்து; ஒருவர் உயிரிழப்பு

சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டியை சேர்ந்தவர் இன்னாசி (65). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவி அமுதமேரியுடன் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு மீண்டும் கொசவபட்டிக்கு வந்து கொண்டிருந்தார். விராலிப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்னாசி உயிரிழந்தார். அமுதமேரி சிகிச்சை பெற்று வருகிறார்.
News March 6, 2026
திண்டுக்கல் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. “வெளிநாட்டில் வேலைவாய்ப்பு” அல்லது “பகுதி நேர வேலை” என உங்கள் அலைபேசிக்கு வரும் மர்ம அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை (SMS) நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


