News October 27, 2024

காரைக்குடி: மகன் திட்டியதால் தாய் தற்கொலை

image

விருதுநகர் அருப்புக்கோட்டை தீர்த்தக்கரையை சேர்ந்தவர் ராமலட்சுமி(65)இவரது மகன் சிவக்குமார். திருமணம் செய்து வைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் மது குடித்து விட்டு சிவக்குமார் தனது தாய், தந்தையை திட்டியுள்ளார். இதில் மனம் உடைந்த ராமலட்சுமி காரைக்குடியிலுள்ள மருத்துவமனைக்கு செல்வதாக கூறி இங்கு வந்து விஷம் அருந்தினார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் உயிரிழந்தார்

Similar News

News May 8, 2025

ரூ.1 லட்சம் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்

image

பூவந்தி அருகே கிளாதரி கக்ணாம்பட்டியை சேர்ந்த குமார், முத்துகருப்பி தம்பதியினர் தனது குழந்தைகளின் காதணி விழாவிற்காக ரூ.1 லட்சம் பணத்தை சேமித்து ஒரு தகர டப்பாவில் போட்டு மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அதை பார்க்கும் பொழுது பணம் கரையான்களால் பறிக்கப்பட்டிருந்ததை கண்டு வேதனை அடைந்தனர். இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தம்பதியை நேரில் அழைத்து ரூ.1 லட்சம் வழங்கினார்.

News May 7, 2025

சிவகங்கை: காவல்துறை அதிகாரிகளின் தொடர்பு எண்கள்

image

▶️ஆஷிஷ் ராவத் ஐபிஎஸ் – 04575-240427 (எஸ்.பி)
▶️பி.கலைகதிரவன் – 04575-243244 (ஏ.டி.எஸ்.பி)
▶️எல்.பிரான்சிஸ் – 04575240587 (ஏ.டி.எஸ்.பி)
▶️சி.உதயகுமார் – 9498164247(ஏ.டி.எஸ்.பி)
▶️திருப்பத்தூர் – 04577-26213 (டி.எஸ்.பி)
▶️தேவக்கோட்டை- 04561-273574 (டி.எஸ்.பி)
▶️காரைக்குடி – 04565-238044 (டி.எஸ்.பி)
▶️மானாமதுரை- 04574-269886 (டி.எஸ்.பி)
▶️சிவகங்கை – 04575-240242 (டி.எஸ்.பி) *ஷேர் பண்ணுங்க

News May 7, 2025

சிவகங்கை மாவட்டத்தில் 4 ரயில் நிறுத்தம்

image

கோயமுத்தூர் – ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்தோறும் பிரதி புதன்கிழமை சிவகங்கை மாவட்ட ரயில் நிலையங்களான காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு வழியாக நின்று செல்லும் கால புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அறிவிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!