News March 30, 2025
காரைக்குடி அழகப்பா பல்கலையில் இலவச திறன் பயிற்சி

அழகப்பா பல்கலைக்கழகம் – லேர்நெட் திறன் வளர்ப்பு நிறுவனம் சார்பில் தீன் தாயாள் உபாத்யாய கிராமின் கெளசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் 100 சதவீதம் வேலை வாய்ப்புடன் கூடிய இலவச திறன் பயிற்சிகள் காரைக்குடி அழகப்பா பல்கலையில் வழங்கப்படுகிறது. தங்குமிடம், உணவு முற்றிலும் இலவசம். கிராமப்புற கிறிஸ்துவ,இஸ்லாமிய இளைஞர்களுக்கு மட்டும் இந்த பயிற்சி. மேலும் தகவலுக்கு 9677946774 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். share it
Similar News
News April 1, 2025
தொழில் முனைவோர்கள் பதிவு செய்யலாம் – ஆட்சியர்

ஈரோடு மாவட்டம் ஈங்கூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் தொழிற்பேட்டைகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழிற் கூடங்களை குத்தகை மற்றும் வாடகை முறையில் வழங்க திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் https://forms.gle/fZPDgyWUToAAUobt7 என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று தெரிவித்துள்ளார்.
News April 1, 2025
சிவகங்கையில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 1, 2025
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை

சிவகங்கை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டு பயிற்சியாளர் பணியிடத்திற்க்கு 1 காலிபணியிடம் உள்ளது. ஏதாவது ஒர் பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் சம்பளம் வழஙகப்படும். விண்ணப்பதாரர்கள் நேரடியாக வாக்-இன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். <