News December 24, 2025

காரைக்குடியில் அடுத்தடுத்து கடைகளை உடைத்து திருட்டு

image

காரைக்குடி ரயில் நிலையச் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் சூர்யா என்பவர் அழகு நிலையம் நடத்திவருகிறார். அதே வளாகத்தில் கார்த்திகா என்பவர் ஹோமியோபதி மருந்துக்கடை நடத்தி வருகிறார். அழகு நிலைய கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.85,500 ரொக்கம், வெள்ளிக் காப்பும், அதேபோல், ஹோமியோபதி கடையில் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.1,000 பணம் திருடப்பட்ட நிலையில் காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 26, 2025

BREAKING: பிள்ளையார்பட்டி முறைகேடு; கோர்ட் அதிரடி.!

image

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் நகை முறைகேடு வழக்கில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அறக்கட்டளை கணக்குகளை சரிபார்க்க பட்டய கணக்காளர் ராஜராஜேஸ்வரனை நியமித்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் கொண்ட ஆணையம், ஜனவரி 30க்குள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

News December 26, 2025

சிவகங்கை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04575-242561
தமிழ்நாடு அவசர உதவி: 0462-2572689
Toll Free 1800 4252 441
சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 26, 2025

அச்சத்தில் சிவகங்கை போலீசார்

image

சிவகங்கை ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் 24 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதில் தற்போது 90 ஆயுதபடை போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர். குடியிருப்புகள் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் கூரைகள் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றனர். கட்டடத்தில் குடியிருக்க போலீசார் அச்சப்படுகின்றனர். புதிய வீடுகளை கட்டித் தரவேண்டும் என போலீசார் கோரிக்கை வைகின்றனர்.

error: Content is protected !!