News November 23, 2025
காரைக்கால்: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News February 8, 2026
புதுச்சேரி: இளைஞர் மீது பாந்த குண்டாஸ்

புதுச்சேரி உருவையாரைச் சேர்ந்தவர் பட்ட முருகன்(23). இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்ட இவரை, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் முருகனை மீண்டும் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
News February 8, 2026
புதுச்சேரி: வங்கியில் ரூ.1 லட்சம் மோசடி – ஒருவர் கைது

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(72). இவரின் வங்கிப்புத்தகத்தை திருடிய ஓட்டுநர் ஜெயராமன் என்பவர் அவரின் கையெழுத்தை போலியாகப் போட்டு, வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுத்துள்ளார். இது சிசிடிவி மூலம் உறுதியான பின், மீண்டும் வங்கிக்கு பணம் எடுக்க வந்தபோது, வங்கி ஊழியர்கள் ஜெயராமனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
News February 8, 2026
காரைக்கால் மாவட்டத்திற்கு ஆட்சியராக நியமனம்

புதுச்சேரி சப்-கலெக்டராக பணியாற்றிய இசித்தாரதி, காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிபிரகாஷ், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை செயலாளராக மாற்றப்பட்டார். தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர் குலோத்துங்கனுக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்புகள் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.


