News October 24, 2024
காரைக்கால் மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முனைவர் து. மணிகண்டன், இஆப காரைக்கால் மாவட்டம் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.அதில் மக்களை தேடி மாவட்ட ஆட்சியர் என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக நாளை (24.10.2024)காலை 10.00மணி முதல் பிற்பகல்01.00மணி வரையில் காரைக்கால் நகராட்சி மேயர் பக்கிரி சாமி திருமண மண்டபத்தில் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பட்டா பெயர் மாற்றம் சிறப்பு முகாம் உடன் நடைபெற உள்ளது.
Similar News
News February 8, 2026
புதுச்சேரி: இனி அலைச்சல் இல்லை!

அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்:
1. ஆதார் : https://uidai.gov.in/
2. வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3. பான் கார்டு : incometax.gov.in
4. தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
5. திருச்சி மாவட்ட நிர்வாக அறிவிப்புகளை அறிய: https://tiruchirappalli.nic.in/ta/
6. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News February 8, 2026
புதுச்சேரி: இளைஞர் மீது பாந்த குண்டாஸ்

புதுச்சேரி உருவையாரைச் சேர்ந்தவர் பட்ட முருகன்(23). இவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டதாக, ஏற்கனவே கைது செய்யப்பட்ட இவரை, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து, போலீசார் முருகனை மீண்டும் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
News February 8, 2026
புதுச்சேரி: வங்கியில் ரூ.1 லட்சம் மோசடி – ஒருவர் கைது

புதுச்சேரியை சேர்ந்தவர் ஆதிலட்சுமி(72). இவரின் வங்கிப்புத்தகத்தை திருடிய ஓட்டுநர் ஜெயராமன் என்பவர் அவரின் கையெழுத்தை போலியாகப் போட்டு, வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பணம் எடுத்துள்ளார். இது சிசிடிவி மூலம் உறுதியான பின், மீண்டும் வங்கிக்கு பணம் எடுக்க வந்தபோது, வங்கி ஊழியர்கள் ஜெயராமனை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


