News December 21, 2025
காரைக்கால்: சொத்துவரி செலுத்த அறிவுரை

காரைக்கால் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான 2025-26-ம் நிதியாண்டுக்கான வரியை தற்போது நகராட்சி வரி வசூலிப்போர் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் நிலுவை வரிதாரர்களுக்கு வீடு வீடாக நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது சொத்துக்கான வரியை, உடனடியாக செலுத்திட வேண்டும் என நகராட்சி ஆணையம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 22, 2025
புதுச்சேரி AISF மாநில விரிவடைந்த குழுக்கூட்டம்

புதுச்சேரி, அனைத்திந்திய மாணவர் பேரவை (AISF) மாநில விரிவடைந்த குழுக்கூட்டம், மாநிலத் தலைவர் வி.உதயராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகள் மூடப்பட்டதையும், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் சில பேராசிரியர்கள் RSS மற்றும் ABVP போன்ற அமைப்புகளில் பங்கேற்பதையும் கண்டித்து போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
News December 22, 2025
புதுச்சேரி: திடீரென பெண் உயிரிழப்பு

திருநள்ளாறு நளன்குளம் அருகே, நின்று கொண்டிருந்த 70 வயது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? டூரிஸ்ட்டாக வநதவரா என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 22, 2025
புதுச்சேரி: மீனவர்களின் குறைகளை கேட்ட மத்திய அமைச்சர்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, பாஜக மாநில மீனவர் அணி தலைவர் மாரியப்பனுடன் புதுவை வம்பா கீரப்பாளையம் மீனவ கிராம மக்களை, நேற்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது புதுவை மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் உடன் இருந்தார்.


