News September 19, 2025

காரைக்கால்: கத்தியுடன் திரிந்த வாலிபர் கைது

image

காரைக்கால் மாவட்டத்தில் நகர் பகுதியில் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் நேற்று முன்தினம் கருணாநிதி புறவழிச்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொது இடத்தில், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய கடலுார் மாவட்டம், சிதம்பரம் சிவசக்தி நகரைச் சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திகேயன், 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

Similar News

News September 19, 2025

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீனியர் எஸ்.பி நித்யா ராதாகிருஷ்ணன் வாட்ஸ்அப்/இன்ஸ்டாகிராம்/ஃபேஸ்புக்/டெலிகிராம் போன்ற சமூகவலைதளங்களில் தெரியாத நம்பர்களிலிருந்து ஆன்லைன் வர்த்தகத்தைப்பற்றி வரும் செய்திகளை நம்பவேண்டாம் யாரேனும் உங்களிடம் பணம் தருவதாக கூறி வங்கி கணக்குகள் மற்றும் சிம் கார்டு கேட்டால் அதனைகொடுக்க வேண்டாம் என்றனர். SHARE IT

News September 19, 2025

புதுவை அரசு கல்லூரியில் கேட்வே டூ பிரான்ஸ் 2.0

image

புதுவை பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், பிரெஞ்சு துறை & தர உறுதியளிப்பு குழு சார்பில் ‘கேட்வே டூ பிரான்ஸ் 2.0’ என்ற வழிகாட்டுதல் கருத்தரங்கு நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். பிரெஞ்சு பேராசிரியர் திருவேங்கடம் வரவேற்றார். கேம்பஸ் பிரான்ஸ் நிறுவன மேலாளர் ஸ்ருதி மரியம் ஜோசப், பிரான்சில் உயர்கல்வி வாய்ப்புகள், சர்வதேச மாணவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கினார்.

News September 19, 2025

புதுவை: டீசல் மானியம் அறிவித்த முதல்வர்

image

புதுவை சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி பேசும்போது மீன்வளத்துறையில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட எப்.ஆர்.பி. கட்டுமர உரிமையாளர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட டீசல் நிலையத்தில் டீசல் கொள்முதல் செய்யும் உரிமையாளர்களுக்கு வாட் வரிவிலக்கு அளிக்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் கூடுதலாக 3,208 உரிமையாளர்களுக்கு டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.12 வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!