News October 18, 2025

காரைக்கால்: கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு

image

காரைக்கால் நகராட்சி இந்த ஆண்டு தொடங்க உள்ள வடகிழக்குப் பருவ மழையினை எதிர்கொள்ளும் விதமாக காரைக்கால் நகராட்சியில் கட்டுப்பாட்டு அறையை நிறுவியுள்ளது. ஆகவே பொதுமக்கள் 04368 222427 என்ற தொலைபேசி எண்ணிற்கு 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தங்களின் பகுதிகளில் உள்ள மழை சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்கலாம் என்று காரைக்கால் நகராட்சி நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 18, 2025

புதுவை: நவோதயா பள்ளியில் சேர தேதி நீட்டிப்பு

image

புதுச்சேரி பெரிய காலாப்பட்டு நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் கண்ணதாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 9 மற்றும் 11-ம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் தெரிவுநிலை தேர்விற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான தேதி வருகின்ற 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

News October 18, 2025

புதுவை: தமிழ் இலக்கண போட்டி தேர்வு அறிவிப்பு

image

“தமிழ் வளர்ச்சி சிறகம், தமிழ் இலக்கணப் போட்டி தேர்வை நடத்துகிறது. மாநிலத்தில் பயிலும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே இத்தேர்வு நடத்தப்படுகிறது. நவம்பர் 10-ம் தேதிக்குள் 9360962442 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொண்டு, பெயரினை பதிவு செய்யலாம்.” என புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை தமிழ் வளர்ச்சி சிறகம் சிறப்பு பணி அதிகாரி வாசுகிராஜாராம் தெரிவித்துள்ளார்.

News October 18, 2025

புதுச்சேரி: ரகசிய குழு அமைப்பு!

image

தீபாவளியை முன்னிட்டு புதுவை காவல்துறையினர் ஆண்டுதோறும் தங்கள் பகுதிகளில் வணிகர்களிடம் தீபாவளி இனாமாக பட்டாசு, இனிப்பு, பரிசு பொருள்கள் பெறுவார்கள். சில நேரங்களில் கட்டாயப்படுத்தி பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து டி.ஜி.பி.ஷாலினிசிங், புதுவை போலீசார் யாரிடமும் தீபாவளி பரிசு பெறக்கூடாது என தெரிவித்துள்ளார். இதை கண்காணிக்க ரகசிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!