News October 25, 2025
காரைக்காலில்: மின் தொகை வசூல் மையம் இயங்கும்

காரைக்காலில் உள்ள மின் நுகர்வோர்கள் கவனத்திற்கு (25.10.25) சனிக்கிழமை நாளை காரைக்கால் நகரம் தலைமை அலுவலகம், நேரு நகர், கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு அலுவலகங்களில் மின் தொகை வசூல் மையம் காலை 8.45 முதல் மதியம் 1.00 மணி வரை வழக்கம் போல் இயங்கும் என்பதால் தங்களது மின் கட்டண பாக்கியினை உடனடியாக செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 25, 2025
புதுச்சேரி: பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம்

புதுச்சேரி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவின்படி புதுச்சேரிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், (அக்.25) பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெறும் என புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் இன்று கலைவாணன் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளைப் புகார் மூலம் தெரிவிக்கலாம் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News October 25, 2025
புதுச்சேரி: வங்கி சேவை தற்காலிகமாக நிறுத்தம்

புதுச்சேரியில் நாளை (25.10.2025) பாரத ஸ்டேட் வங்கியின் பராமரிப்பு பணிகள் காரணமாக இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை மதியம் 1.10 மணி முதல் 2.10 மணி வரை வங்கியின் உப்பி, IMPS, YONO, NEFT, RTGS ஆகிய இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் ATM மற்றும் UPI லைட் சேவைகளை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 24, 2025
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் புனரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்காவை முதலமைச்சர் ரங்கசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, குழந்தைகள் மகிழ்ச்சிக்காக சிறுவர்கள் ரயில், மின்சார கார் நீர்வீழ்ச்சி என விதவிதமாக அமைக்கப்பட்டுள்ளது.
தாவரவியல் பூங்கா ஒரு பூங்காவாக மட்டுமில்லாமல், அறிவு சார்ந்த இடமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று பெருமிதமாக தெரிவித்தார்.


