News April 18, 2024
காரைக்காலில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை

காரைக்காலில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 20 ஆம் தேதி காலை 6 மணி வரை சட்டவிரோதமான கூட்டம், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதும் கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுவதும் தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறினால் இந்திய தண்டனை சட்டம் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News February 6, 2026
காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

காரைக்கால், திருநள்ளார் ரோட்டில் உள்ள வாரசந்தைத் திடலில், பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் வருகையை ஒட்டியும், அது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாலும், மாவட்ட நிர்வாகத்திடம் சந்தை திடலை ஒப்படைக்க வேண்டி இருப்பதால் எதிர்வரும் (08.02.2026) மற்றும் (15.02.2026) ஆகிய தினங்களில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரசந்தை நடைபெறும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
News February 6, 2026
புதுச்சேரி: ATM யில் பணம் எடுப்போர் கவனத்திற்கு!

கடலூர் மக்களே, நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் இங்கே <
News February 6, 2026
காரைக்காலில் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

புதுச்சேரியில் வரும் (08.02.2026) நடைபெற உள்ள ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வில், காரைக்கால் பகுதியைச் சார்ந்தவர்கள் நிறைய பேர் கலந்து கொள்ள உள்ளதால், சிறப்பு பேருந்து அதிகாலை 4.30 மணிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், அதுபோல் தேர்வு முடிந்தவுடன் திரும்பி வருவதற்காக சிறப்பு பேருந்தும் இயக்கப்பட வேண்டும் என்று, புதுச்சேரி போக்குவரத்துக் கழக மேலான் இயக்குனரிடம் சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கோரிக்கை வைத்தார்.


