News August 27, 2025
காரைக்காலில் சுனாமி ஒத்திகை கருத்தரங்கம்!

தேசிய பேரிடர் மேலாண்மை வழிகாட்டுதலின்படி எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ள, யூனியன் பிரதேச அளவிலான சுனாமி ஒத்திகை பயிற்சிக்கான, நெறிமுறைகள் பற்றிய கருத்தரங்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் தலைமையில் காணொளி காட்சி மூலம் சம்பந்தப்பட்ட துறை தலைமை அலுவலர்கள் பங்கேற்றனர்.
Similar News
News August 27, 2025
புதுச்சேரியில் மதுபான கடைகளை மூட உத்தரவு

விநாயகா் சிலைகளைக் கடலில் கரைக்கும் ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மூட வேண்டும் என்று புதுச்சேரி கலால்துறை துணை ஆணையா் அலுவலகம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஊா்வலத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களின் நலன்கருதி இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த ஊா்வலம் காமராஜா் சாலை, நேரு வீதி, மகாத்மா காந்தி எஸ்.வி.பட்டேல் சாலை,வழியாக கடற்கரை சாலைக்குச் செல்கிறது.
News August 27, 2025
புதுச்சேரி: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை

புதுச்சேரி மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் <
News August 27, 2025
புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தியில் இத பண்ணுங்க..

➡️ நினைத்த காரியம் நிறைவேற விநாயகர் சதுர்த்தியில் செய்ய வேண்டியவை
➡️ வீட்டை சுத்தம் செய்து, விநாயகர் சிலையை நிறுவ வேண்டும்
➡️ பூ மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்
➡️ 108 முறை “ஓம் கம் கணபதியே நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி வழிபடலாம்
➡️ வழிபடும் நேரம்: காலை 07.45 – 08.45 மற்றும் காலை 10.40 – 01.10 வரை
➡️ அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கும் சென்று வழிபடலாம்
➡️ இத்தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க