News April 28, 2025

காதலிக்கு  நிச்சயமானதால் மாணவர் தற்கொலை

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்த தனலட்சுமி – அர்ச்சுனன் தம்பதியரின் மகன் சரவணகுமார் (18) என்பவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமான விரக்தியில் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 16, 2025

தூத்துக்குடி சட்டப்பணிகள் ஆணை குழுவில் வேலைவாய்ப்பு

image

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் பணிக்கு 37 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பங்களை தூத்துக்குடி நீதிமன்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து அதனை தகுந்த சான்றிதழ் உடன் இம்மாதம் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழு கேட்டுக் கொண்டுள்ளது.

News October 15, 2025

தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் அக்.17 வரை கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மாவட்டத்தில் மருதூர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், கலியாஊர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்று பகுதியில் வசிப்பவர்கள் ஆற்றில் குளிக்கவோ, தாழ்வான பகுதிகள் மழைநீர் தேங்கும் பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.

News October 15, 2025

தூத்துக்குடி: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் தடைபடும். இதனை தடுக்க <>eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!