News November 12, 2024

காணொளி காட்சி மூலம் திறந்த வைத்தார் முதல்வர்

image

காணை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனையடுத்து அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் பழனி, விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ சிவா, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். உடன் திமுக நிர்வாகிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருந்தனர்.

Similar News

News August 16, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (ஆக.15) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100-ஐ அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

News August 15, 2025

விழுப்புரம் சிறந்த மல்லர் கம்ப பயிற்சியாளர் விருது

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி அருகே உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு திடலில் இன்று (ஆக.15) 79-வது சுதந்திர தின விழாவில் கொண்டாடப்பட்டது. இதில் விழுப்புரத்தை சேர்ந்த ஆதி என்பவருக்கு சிறந்த மல்லர் கம்ப பயிற்சியாளருக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வழங்க, காவல் கண்காணிப்பாளர் சரவணன், கூடுதல் ஆட்சியர் பத்மஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

News August 15, 2025

தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி திடீர் விசீட்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தொட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி, தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். அன்புமணியின் தாயார் சரஸ்வதிக்கு இன்று(ஆக.15) பிறந்தநாள் என்பதால் ஆசிர்வாதம் பெற சென்றதாக தகவல். ராமதாஸ் – அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருள் ஆகியுள்ளது.

error: Content is protected !!