News May 7, 2025
காணாமல் போனவர் அழுகிய நிலையில் மீட்பு

ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியை சேர்ந்தவர் மணி மகன் பிரபு குமார் (42). இவர் இரண்டு நாட்களாக காணவில்லை. இந்நிலையில், இவர் அழுகிய நிலையில் நெல்லியேந்தல்பட்டி கண்மாயில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. குளிக்க சென்றவர் வலிப்பு ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. இது குறித்து சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து ஒத்தக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 21, 2025
மதுரை: இலவச வீட்டு மனை வேண்டுமா?..

மதுரை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 21, 2025
மதுரை: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை ரெடி.!

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <
News December 21, 2025
மதுரை: அரசு அலுவலகம் புகுந்து அலுவலர் மீது தாக்குதல்

மேலூரை சேர்ந்த ஞானசேகர்(29) மதுரை எல்லீஸ் நகரில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார். நேற்று அலுவலகத்திற்கு வந்த நாகராஜன்(52) என்பவர் தகராறில் ஈடுபட்டு, அருகில்
கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த ஞானசேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எஸ்.எஸ்.காலனி போலீசார் நாகராஜனை கைது செய்தனர்.


