News October 20, 2024

காட்பாடி ரயிலில் கடத்த முயன்ற 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

image

காட்பாடி ரயில்வே போலீசார் நேற்று பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் சந்தேகத்துடன் அமர்ந்திருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாணாவரத்தை சேர்ந்த ராஜேஷ்(23) என்பதும் அரக்கோணத்தில் இருந்து பெங்களூருக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 1500 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 11, 2025

சென்னை – வேலூர் 1 மணி நேரத்தில் செல்லலாம்

image

சென்னை – வேலூருக்கு இடையே (140 கி.மீ.) RRTS ரயில் சேவையை கொண்டு வர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. ‘பாலாஜி ரயில் ரோடு’ என்ற நிறுவனத்திடம் சாத்தியக்கூறுகள் தயாரிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னையில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 20 நிமிடத்திலும், வேலூருக்கு 1 மணி நேரத்திலும் பயணிக்கலாம். மெட்ரோவைவிட 3 மடங்கு அதாவது 180 கி.மீ. வேகத்தில் செல்லும். ஷேர் பண்ணுங்க

News July 11, 2025

பெண்ணிடம் செல்போனை பறித்த சென்ற வாலிபர்

image

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்வதற்காக பஸ்சில் பெண் ஒருவர் ஏறி உள்ளார். அப்போது அவர் கையில் வைத்து இருந்த செல்போனை வாலிபர் ஒருவர் பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். சக பயணிகள் துரத்தி சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து வேலூர் வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்‌. இதையடுத்து அந்த வாலிபரை பிடித்து வடக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

News July 10, 2025

வேலூரில் இரவு ரோந்து பணி செய்யும் போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜூலை 10) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!