News November 6, 2024
காட்டு யானைகளை ஒருங்கிணைத்து விரட்ட தயாராகும் வனத்துறை

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 80க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, ஜவளகிரி தேன்கனிக்கோட்டை ஆகிய வனப்பகுதிகளில் சுற்றி வருகின்றன. இந்த காட்டு யானைகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து அனைத்தையும் ஒன்றிணைத்து மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கு விரட்டும் முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதற்காக 50க்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.
Similar News
News August 22, 2025
கிருஷ்ணகிரியில் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆக.22) காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற உள்ளது. எட்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். 25க்கு மேற்பட்ட கம்பெனிகள் பங்கேற்க உள்ளன. மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் கலந்து கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க
News August 22, 2025
கிருஷ்ணகிரி மக்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

கிருஷ்ணகிரி இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பாக இளைஞர்கள் பயன்பெறும் வகையில் இலவச இரண்டு சக்கர வாகன பழுது நீக்க பயிற்சி அளிக்க உள்ளது. 18-45 வயது வரை உள்ள இளைஞர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். நாளை முதல் வகுப்புகள் தொடங்கும். பயிற்சி முடிந்த பின்பு அரசு சான்றிதழும், தொழில் தொடங்குவதற்கான வங்கி கடன் உதவியும் செய்து தரப்படும். மேலும் 9442247921 தொடர்பு கொள்ளவும். ஷேர் IT
News August 21, 2025
கிருஷ்ணகிரி காவல்துறை இரவு நேர ரோந்து பணி

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (21.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிகோட்டை மற்றும் ஓசூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கான இரவு நேர ரோந்து பணி செய்யும் அதிகாரியின் பெயர் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண்ணும் காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது