News March 24, 2025

காட்டுப்பன்றி தாக்கிப் பெண் காயம்

image

கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பூரணம். ஊருக்கு மேற்கே கல்யாணி ஓடை அருகே இவருக்கு விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இரு பெண்களை அழைத்துக் கொண்டு நெல் வயலுக்கு, களை எடுக்கச் சென்றார். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் பூரணம் காயமடைந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 20, 2025

விருதுநகர் கலெக்டர் கார் மறிப்பு

image

விருதுநகர், வத்திராயிருப்பு அருகே கீழக்கோட்டையூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர கோரி 7 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த நிலையில், இதுவரை கட்டித் தரப்படவில்லை. நேற்று முன்தினம் கலெக்டர் சுகபுத்ரா கோட்டையூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்திற்கு வந்த கலெக்டரின் காரை மறித்த கிராம மக்கள் 5பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News December 20, 2025

விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

News December 20, 2025

விருதுநகர்: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

image

காரியாபட்டி – நரிக்குடி சாலையில் தேனூர் விலக்கு பகுதியில் போதிய பேருந்து வசதிகள் செய்து தரவேண்டும் என வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து மாணவ, மாணவிகள் மறியலை கைவிட்டு பள்ளி சென்றனர்.

error: Content is protected !!