News November 24, 2025
காஞ்சி: விபத்தில் பெண் பரிதாப பலி!

காஞ்சி: கோனேரி குப்பம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி(65). இவர் கூலி வேலைக்குச் சென்று விட்டு திரும்பி வரும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News November 24, 2025
காஞ்சி: மனைவியை துடிதுடிக்க, கழுத்தறுத்து கொலை!

காஞ்சி: படப்பையில் உள்ள ஆதனஜ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கங்காதரன்(36). இவருடைய மனைவி நந்தினி(29). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கங்காதரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், நந்தினி தனது பெரியம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று தகராறு செய்த கங்காதரன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News November 24, 2025
காஞ்சி: கலப்பு திருமணத்திற்கு ரூ.20,000!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., கலப்பு திருமணம் செய்திருந்தால் அவர்களுக்கு அரசின் சார்பாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதாவது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.20,000, BC,MBC வகுப்பை சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் மாவட்ட சமூக நல அலுவல்கத்தில் விண்ணப்பிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!
News November 24, 2025
காஞ்சி: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <


