News September 27, 2025
காஞ்சி: ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை!

இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிறுவனமான NHPC-ல் காலியாக உள்ள 248 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி ராஜ்பாஷா அதிகாரி, ஜூனியர் பொறியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்படுகின்றன. BE, டிப்ளமோ, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.40,000-ரூ.1,05,000 வரை. விருப்பமுள்ளவர்கள் அக்-1ஆம் தேதிக்குள் <
Similar News
News January 6, 2026
காஞ்சிபுரத்தில் 812 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் 2024-ல் 416 பேரும், 2025-ல் 396 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1,545 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துகளைக் குறைக்கக் காவல்துறை சார்பில் சுமார் 578 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஓட்டுநர்களின் கவனக்குறைவு மற்றும் சாலைப் பிரச்சனைகளால் விபத்துக்கள் நடந்த வர்ணம் இருக்கிறது.
News January 6, 2026
காஞ்சி: லஞ்சம் கேட்ட VAO-வுக்கு விழுந்த ‘செக்’!

திருவள்ளூர் மாவட்டம் குமாரச்சேரியில், இலவச வீட்டுமனை பட்டாவை வருவாய் கணக்கில் பதிவேற்றம் செய்ய ரூ.2,000 லஞ்சம் வாங்கிய வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தவேலுவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். காவலாளி சிவக்குமாருக்கு DCM உதயநிதி ஸ்டாலின் வழங்கிய பட்டாவைப் பதிவேற்ற ஆனந்தவேலு லஞ்சம் கேட்டுள்ளார். சிவக்குமாரின் புகாரின் பேரில், நேற்று பணத்தை அவர் வாங்கும்போது கைது செய்தனர்.
News January 6, 2026
காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (ஜன.05) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


