News January 25, 2026
காஞ்சி: மின் வாரியத்தின் ‘நூதன’ கண்டு பிடிப்பால் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரத்தூர் அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு, மின் வாரியம் நூதன முறையில் பதிலளித்துள்ளது. கம்பி துருப்பிடித்த இடத்தில் ரப்பர் காலணியை நுழைத்து தற்காலிகமாகச் சரிசெய்துள்ளனர். போக்குவரத்து மிகுந்த இச்சாலையில் இத்தகைய ஆபத்தான மற்றும் அலட்சியமான செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்துள்ளனர்.
Similar News
News February 19, 2026
காஞ்சிபுரத்தில் பிணையமின்றி ரூ.40 லட்சம் கடனுதவி!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., சொந்தமாக தொழில் தொடங்க ஆசையா..? கடன் வாங்க சொத்து ஏதும் இல்லையா..? கவலை வேண்டாம். அரசு சார்பாக உங்களுக்கு ரூ.40 லட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கப்படுகிறது. இந்த TNCGS திட்டத்தில் இணைய, உங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ( TAICO) , TAMCO, மாவட்ட தொழில் மையங்களில் விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News February 19, 2026
காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுறுத்தல்!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் இரண்டு மூன்று நாட்கள் முன்னதாக பறவை இறந்து கிடந்தது. பறவை காய்ச்சலால் இறந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகேம் கொண்டுள்ளனர். இந்நிலையில், இன்று(பிப்.19) மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி, இறந்த பறவைகளை தாங்களாகவே அப்புறப்படுத்தாமல், கால்நடை மருத்துவ துறைக்கு தெரியப்படுத்தவும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
News February 19, 2026
காஞ்சிபுரத்தில் அதிரடி கைது!

ஒரகடம் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், பண்ருட்டி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் போதை வஸ்துக்கள் கொரியர் மூலம் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சோதனை செய்ததில், 200 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தூத்துக்குடியைச் சேர்ந்த துரைசெல்வன்(27) என்பவரை கைது செய்தனர்.


