News January 12, 2026

காஞ்சி: பாட்டிலுக்கு ரூ.10 கேட்டால்.., உடனே CALL!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பிளாக்கில் விற்பனை நடப்பது, குறிப்பிட்ட நேரத்தை தாண்டி விற்பனை, விலைக்கு மேல் ரூ.10 கேட்பது, மேலும் எந்த வித மோசடி செயல்கள் நடந்து வந்தாலும், அதுகுறித்து உடனடியாக 044-27667070 என்ற லஞ்ச ஒழிப்புத் துறை எண்ணிற்கு புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News January 30, 2026

குன்றத்தூரில் சர்க்கரை நோயால் விபரீத முடிவு!

image

குன்றத்தூர் அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட மேம்பாலம் மீது ஒருவர் கையில் கயிறுடன் 30 அடி உயரத்தில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த குன்றத்தூர் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர் குன்றத்தூரைச் சேர்ந்த கன்னியப்பன்(47) என்பதும், சர்க்கரை நோய் தாக்கம் அதிகமாக இருந்ததால் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.

News January 30, 2026

குன்றத்தூரில் சராமாரியாக வெட்டி வெறித் தாக்குதல்

image

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்த்(42). இவரது நண்பர் சங்கர்(47). இருவரும் கொல்லச்சேரியில் உள்ள ஓட்டலில் பணி செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த வசந்த், கத்தியால் சங்கரை சராமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, வசந்தை கைது செய்தனர்.

News January 30, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!