News December 27, 2025

காஞ்சி: தாயை தற்கொலைக்கு தூண்டிய மகன்!

image

உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(70). இவரது மனைவி வசந்தா(65). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வீட்டின் பாகம் பிரிப்பதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர்களது மகன் சங்கரும், அவரது மனைவி சாந்தியும் வசந்தாவை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த வசந்தா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Similar News

News December 30, 2025

காஞ்சிபுரம்: சிறுவன் மீது கல்லால் தாக்குதல்!

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கன்னியப்பன்(18), திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுருந்து வந்தார். இவருடன் இரண்டு பேர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், கன்னியப்பன் மீது ஒரு கொலை வழக்கு உள்ளதும், அதற்கு பழிவனக்குவதற்காக கூட இருந்த 18 வயது சிறுவன் கல்லால் தாக்கியதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 30, 2025

காஞ்சிபுரம்: விபத்தில் துடிதுடித்து பலி!

image

சாலவாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட புத்தரகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் திவாகர்(32) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 3 மாதத்தில் ஓர் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் பைக்கில் பழைய சீவரம் சர்க்கரை ஆலை அருகே சென்ற போது பின்னால் வந்த பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 30, 2025

காஞ்சிபுரம்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் நேற்று (29.12.2025) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பார்க்கும் அதிகாரிகள் மற்றும் காவல் நிலையங்கள் தொடர்பு எண்கள் பொதுமக்களுக்கு வசதியாக சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவி மற்றும் குற்ற செயல்களோ அல்லது சந்தேக நிலை ஏற்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் சென்று பெயர் பட்டியலில் உள்ள அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் அல்லது தொலைபேசியின் மூலம் தொடர்பு கொள்ளவும்

error: Content is protected !!