News October 27, 2025
காஞ்சி: டிகிரி போதும், ரூ.30,000 சம்பளம்!

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் இந்த <
Similar News
News October 27, 2025
காஞ்சி: Gpay-யில் பணம் போனால் கவலை வேண்டாம்!

காஞ்சிபுரம்: இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News October 27, 2025
காஞ்சிபுரம் உழவர் சந்தையில் விலை நிலவரம்

காஞ்சிபுரம் உழவர் சந்தையில் இன்றைய (அக்,27) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.20-25, உருளைக்கிழங்கு ரூ. 30-35, சின்ன வெங்காயம் ரூ. 50-60, பெரிய வெங்காயம்-ரூ.20-25, தேங்காய் ரூ. 20-25 , அவரைக்காய் ரூ.30-40 என விற்பனையாகிறது.
News October 27, 2025
காஞ்சி: 124 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 123 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. மேலும் 135 ஏரிகள் 75%, 289 ஏரிகள் 50 %, 272 ஏரிகள் 25%, 87 ஏரிகள் 25%திற்கும் குறைவாக நிரம்பியுள்ளதாக நீர்வளத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஏரிப் பகுதியை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.


