News November 15, 2025
காஞ்சி: கோவில் அருகே போதைப்பொருள் விற்பனை!

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் பின்புறம் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரை சிவகாஞ்சி போலீசார் நேற்று (நவ.14) கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 4.500 கிலோ எடையிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 15, 2025
காஞ்சி: ரேஷன் உறுப்பினர் சேர்க்கை; PHONE போதும்!

உங்க ரேஷன் கார்டில் புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு அலைய வேண்டியதில்லை. உங்க போன் போதும். 1<
News November 15, 2025
காஞ்சி: உங்களிடம் பைக், கார் உள்ளதா?

காஞ்சிபுரம் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News November 15, 2025
ஸ்ரீபெரும்புதூர்: ஓடும் பேருந்தில் துணிகரம்!

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் நர்மதா (31). இடியாப்ப வியாபாரம் செய்து வருகிறார். இவர், தனது கணவருடன் சொந்த ஊரான சிவகங்கை சென்று விட்டு நேற்று முன்தினம் ஆம்னி பஸ்சில் கோயம்பேடு வந்தபோது, கையில் வைத்திருந்த பையில், ரூ.14,000 & வெள்ளியிலான கைசங்கிலி திருடுபோய் இருப்பது தெரிந்தது. போலீசார் விசாரித்ததில், முன் இருக்கையில் இருந்த சிங்காரம் (60) திருடியது தெரியவந்தது. போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


