News February 11, 2026
காஞ்சி: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

காஞ்சி மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
▶️பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
▶️இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
▶️ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் (ம) ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
Similar News
News February 14, 2026
காஞ்சிபுரம்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 14, 2026
காஞ்சிபுரம்: இரவு நேரங்களில் அடூழியம்!

குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி ராயப்பா நகர் பகுதியில் அடையாறு ஆற்றுக்குச் செல்லும் கால்வாய் உள்ளது. அங்கு இரவு நேரங்களில் மண் திருடப்படுகிறது. இதனால், ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு, கரை உடையும் அபாய நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.
News February 14, 2026
குன்றத்தூர் அருகே பயங்கர விபத்து!

காஞ்சிபுரம்; குன்றத்தூர் அடுத்த சிக்கராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்(40). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று(பிப்.13) குடி போதையில் ஆட்டோவை வேகமாக சிவன் தாங்கல் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதினார். இதில், படுகாயமடைந்த ராஜேஷை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


