News September 7, 2025
காஞ்சி: குழந்தை வரம் பெற இந்த கோயிலுக்கு போங்க!

ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் விஸ்வரூப பாலமுருகன் கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லால் ஆன 180 டன் எடையில் 40 அடி உயரம் கொண்ட விஷ்வரூப பாலமுருகன் மூலவராக உள்ளார். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் குழந்தை இல்லாத தம்பதிக்கு பாலமுருகனே குழந்தையாக பிறப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
Similar News
News September 8, 2025
மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கடும் சோதனை

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், கடந்த வாரம் மூதாட்டி ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, மனு கொடுக்க வருபவர்களின் பைகள் மற்றும் குடிநீர் பாட்டில்களை சோதனை செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்
News September 8, 2025
காஞ்சிபுரம்; 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் நலனுக்காக ஐந்து தாலுகாக்களில் 60 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மொத்தம் 77 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த நிலையங்கள் மூலம் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நிர்ணயித்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.
News September 8, 2025
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு

காஞ்சிபுரம் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இதைப்பெற ▶️குடும்ப அட்டை ▶️வருமானச் சான்று ▶️ குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட சான்றுகளுடம் காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அல்லது உங்களுடன் <