News October 26, 2025

காஞ்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் நாளை (அக்.27) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்களது கோரிக்கைளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News

News January 30, 2026

குன்றத்தூரில் சர்க்கரை நோயால் விபரீத முடிவு!

image

குன்றத்தூர் அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட மேம்பாலம் மீது ஒருவர் கையில் கயிறுடன் 30 அடி உயரத்தில் இருந்து குதித்தார். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த குன்றத்தூர் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர் குன்றத்தூரைச் சேர்ந்த கன்னியப்பன்(47) என்பதும், சர்க்கரை நோய் தாக்கம் அதிகமாக இருந்ததால் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.

News January 30, 2026

குன்றத்தூரில் சராமாரியாக வெட்டி வெறித் தாக்குதல்

image

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வசந்த்(42). இவரது நண்பர் சங்கர்(47). இருவரும் கொல்லச்சேரியில் உள்ள ஓட்டலில் பணி செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு, இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த வசந்த், கத்தியால் சங்கரை சராமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, வசந்தை கைது செய்தனர்.

News January 30, 2026

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.29) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!