News September 4, 2025

காஞ்சி: ஆம்புலன்ஸஸ் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பியுங்கள்

image

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான ஓட்டுனர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 7ஆம் தேதி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பவர்களுக்கு கல்வி தகுதி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது 24 முதல் 35 உள்ளவராகவும், மாதம் ஊதியம் 21,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தகவலை அனைவருக்கும் பகிர்ந்து வேலை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Similar News

News March 9, 2026

அரசு பணியாளர்களுக்கு பதவி உதவி வழங்க கோரி மனு

image

காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மைளத்தின் மாவட்டத் தலைவர் அவலூர் ஜி சீனிவாசன் மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசனிடம் மனு வழங்கினார். அந்த மனுவில் அரசு துறையில் 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் பதவி உயர்வு வழங்க கோரி வலியுறுத்தப்பட்டது.

News March 9, 2026

காஞ்சிபுரம்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

image

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> செய்யவும். ஷேர் பண்ணி வேலை தேடுவோருக்கு உதவி பண்ணுங்க.

News March 9, 2026

காஞ்சியில் 250 கோழிகள் இலவசம்!

image

காஞ்சிபுரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!