News August 19, 2025
காஞ்சியில் வேலைவாய்ப்பு முகாம்!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதனை உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
Similar News
News August 19, 2025
காஞ்சிபுரத்தில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் ஆகஸ்ட் 22ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில், 8th, SSLC, 12th, ITI, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு இந்த <
News August 19, 2025
காஞ்சிபுரத்தில் இலவசமாக பட்டா பெறலாம் 1/2

காஞ்சிபுரத்தில் சொந்த வீடு இல்லாமல் அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்களுக்கு, ‘இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்’ திட்டத்தின் கீழ் தாங்கள் வசித்து வரும் நிலத்திற்கு பட்டா பெற முடியும். நிலம் ஆட்சேபனையற்ற நிலமாக இருந்தால், காஞ்சிபுரம் மாநகராட்சி மக்களுக்கு 2 செண்டு நிலம் இலவசமாக பெற முடியும். விண்ணப்பிக்கும் முறை தெரிந்து கொள்ள <<17451635>>இங்கு கிளிக் பண்ணுங்க<<>>. ஷேர் பண்ணுங்க.
News August 19, 2025
காஞ்சிபுரத்தில் இலவசமாக பட்டா பெறலாம் 2/2

இலவச பட்டா பெற அந்த நிலத்தில் 10 ஆண்டுகள் குடியிருப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மனு எழுதி குடும்ப அட்டை, ஆதார், வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வீட்டு வரி ரசீது, மின்சார ரசீது போன்றவற்றை இணைத்து உங்கள் பகுதி வட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வட்டாட்சியர் அதை பரிசீலனை செய்து பட்டா வழங்குவார். நிலமில்லாமல் வசித்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் நல்ல திட்டம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க