News June 4, 2024
காஞ்சியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
Similar News
News August 21, 2025
காஞ்சிபுரம் வரும் இபிஎஸ்

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் வி.சோமசுந்தரம் நேற்று (ஆக.20) செய்தி குறிப்பை நேற்று வெளியிட்டார். அதில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (ஆக.21) காஞ்சிபுரம் வருகை தந்து விவசாயிகள், நெசவாளர்கள் சந்தித்து பேசுகிறார். இதனையடுத்து மாலை குமரக்கோட்டம் முருகன் கோவில் அருகில் பொதுகூட்டத்தில் பேசுகிறார். மேலும் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் பேசுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
காஞ்சிபுரம்: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

காஞ்சிபுரம் மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தை பெற கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது இன்று நடக்கும் <
News August 21, 2025
காஞ்சிபுரத்தில் 1000-ம் பேருக்கு வேலை ரெடி!

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.