News September 12, 2025

காஞ்சிபுரம்: 8th pass போதும்! உள்ளூரில் அரசு வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் இங்கே <>கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம்.

Similar News

News September 12, 2025

பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகளை பேருந்து மூலம் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் களப்பயணத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்விமோகன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மூன்று பேருந்துகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

News September 12, 2025

சென்னையுடன் செய்யாறை இணைக்க 43 கி. மீ சாலை

image

சென்னையுடன் செய்யாறு தொழிற்தட பகுதியை இணைக்கும் வகையில் 43 கி.மீ நீள நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் 33 கிராமங்களில் நிலம் கைப்பற்றப்படுகிறது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 கிராமங்களும் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 கிராமங்களும் அடங்கும்.

News September 12, 2025

காஞ்சிபுரம்: தொழில் தொடங்க ரூ.75 லட்சம் வரை மானியம்

image

தொழில் தொடங்க அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கி வருகிறது. இதில் ரூ.75 லட்சம் திரும்ப செலுத்த தேவையில்லை(25%மானியம்). தொழிலுக்கான முழுமையான திட்டமிடலுடன் விண்ணபிக்க வேண்டும்.பொது பிரிவினர் தனது பங்காக திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் மற்றும் பிற பிரிவினர் 5 சதவீதம் செலுத்த வேண்டும். 21-35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த <>லிங்க்<<>>/மாவட்ட தொழில் மையம் மூலம் விண்ணபிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!